Sunday, July 14, 2013

குறைந்த பேச்சு ஆபத்து ! அதிகம் பேச்சு பேராபத்து !!

டெமாட்தனிச் பற்றி அறியாதவர் ஒரு சிலரே. சிறந்த மேடை பேச்சாளரான  இவர் சிறு வயதில் திக்கு வாயனாக இருந்தார்.தனது சகவயது தோழர்கள் கேலி செய்வதை தாங்க முடியாத இவர். தனது முடியை மழித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தார்.




ஆனால் பின்பு தன்னம்பிக்கைப் பெற்று, யாருமில்லாத சமயத்தில் கடற்கரைக்குச் சென்று கூழாங்கர்களை வாயினிற் போட்டு பேசப் பழகினார். இன்று உலகமறிந்த பேச்சாளராக திகழ் தார் .

நன்றி: நீ ஒரு சாதனையாளன். 

Saturday, July 13, 2013

(ஒன்றே சொல் நன்றே செய்) கூர்மை

 செய்யும் போது ஒரே சிந்தனையுடன் செயலை செய்ய வேண்டும். ஆணியும்  கூர்மையாக இருந்தால்தான் ஆணிக்கே மதிப்பு. அதுபோல நாம் செய்யும் வேலையும் கூர்மையாக இருக்க வேண்டும்.

ஒரு இளைஞன் மிகுந்த நட்டத்தில் இருந்தான். அவனுக்கு விறகு வெட்டும் வேலைதான் கிடைத்தது.  அந்த விறகு வெட்டும் வேலையில் ஒரு நாளைக்கு 5 மரங்கள் வெட்ட வேண்டும், அதுதான்  ஒப்பந்தம்.




மறுநாள் மிகுந்த உற்சாகத்துடன் தனது வேலையை தொடங்கினான், என்ன ஆச்சரியம் 10 மரங்கள்  வெட்டிட்டினான் , அதாவது ஒப்பந்தந்தை விட கூடுதலாக 5 மரங்கள், முலாளியிடம் பராட்டும் பெற்றான்.
 அதற்கு அடுத்த நாள் 8 மரங்களும், அடுத்த நாள் 6 மரங்களும் வெட்டினான் . முதலாளியும் மகிழ்ந்தார்.

நான்காவது நாள் அந்த இளைஞனால் 3 மரம் மட்டுமே வெட்ட முடிந்தது. தன்னால் 3 மரங்களுக்கு மேல் வெட்ட முடியவில்லை என்று சோர்வாக முதலாளியிடம் பதிலளித்தான் அந்த துடிப்பற்ற இளைஞன்.

முதலாளியும் ஆறுதல் கூறி, ஒரு முதியவரிடம் ஆலோசனை பெறுமாறு கூறினார்.ஏனெனில் அம்முதியவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 மரங்கள் வெட்டுபவர்.

இந்த இளைஞன் அவரிடம் சென்று ஆலோசனை கேட்டான். அவர் கூறிய வார்த்த அவனை சிந்திக்க வைத்தது,





"ஒவ்வரு மரமும் வெட்டி முடித்த பின் நான் தவறாமல் கோடரியை கூர்மைபடுதுகிறேன் என்றார்."
இக்கதையிலிருந்து நாம் அறிவது கூர்மையுடன் இருக்க வேண்டும். நேரம் தவறாமல் கூர்மைபடுத்த வேண்டும்.

நன்றி: நன் கேட்டே அனுபவங்கள். 

Saturday, November 3, 2012

தேவை VS ஆசை நேருக்கு நேர்.

ஒருவன் வெயிலில் நடந்து செல்லும் போது, மரத்தின் நிழலில் ஒதுங்குவது "தேவை".ஆனால் எனக்கு குளிர்சாதன அறைதான் வேண்டுமென்றால் அது "பேராசை".

இன்றைய இளைஞர்கள் தேவை எது ஆசை எது என்று தெளிவில்லாமல் இருக்கின்றனர். 

நன்றி:வளரும் இளமை .

புத்தருக்கும் ஓர் ஆசை !

புத்தருக்கும் ஓர் ஆசை , ஆசையை அழிக்க வேண்டுமென்று.ஆசையில்லாமல்  எதுவம் நடப்பதில்லை.


ஒரு செயலை செய்யும்போது தெளிவு அவசியமாம் ஆனால் தூக்கத்திற்கு இது பொருந்தாது.


மனிதன் ஆசைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்,அதுவே தேவையாகவும் இருக்க வேண்டும்.
நன்றி:நீ ஒரு சாதனையாளன்.

Friday, November 2, 2012

முதல் பதிப்பு...

தன்னம்பிக்கை என்னும் ஒலியை உணரும் போதே மனதில் தைரியமும் , சுயபலமும் பெறுகிறது .ஆனால் சிலருக்கோ சாதனை என்னும் வார்த்தையைக் கேட்ட பிறகும்   தன்னம்பிக்கை   பிறக்கவில்லை  ,ஏனோ விரக்தி ?



சாதனை மனிதர்களை ஏக்கத்துடன் பார்க்கும் சாதாரண மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னவோ, அவர்கள் ஒன்றை அறியவில்லை இலச்சக்கணக்கான உயிர் அணுக்களை பின்னுக்கு தள்ளி இவ்வுலகில் பிறந்ததே சாதனை தான். அவ்வகையில் பார்த்தல் நாம் அனைவரும் சாதனையாளர்கள் தான்.

சோம்பேறிகளுக்கு பிடித்த வார்த்தை.

உன்னால் முடியாது,எதுவுமில்லை,நீ செய்ய முடியாது என்று சொல்வதையெல்லாம் உலகில் எங்கோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.

உழைப்பு உழைக்கதவர்களுக்கும் பிடித்த ஒன்று.ஒருவன் தன கடமைகளை ஒழுங்காக செய்தால் அதுவும் சாதனைதான்.
ஆம் .உழைப்பு சோம்பேறிகளுக்கும் பிடித்த வார்த்தை .ஏனெனில் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை.

தெரிந்த விடயத்தை தெரிந்துகொள்வது பெரிய விடயமன்று,தெரியாதவர்களை தெரிய முயல்வதும் சுலபமன்று .